வாகன விபத்தில் வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதூர்:சென்னை, பழந்தண்டலம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மகன் ஜோசப் ராஜ் (30). லாரி டிரைவர். ஜோசப் ராஜ், சோபனா என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இருவரும் வாலாஜாபாத்தில் வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜோசப்ராஜ் வேலை முடிந்து வண்டலூர் - வாலாஜாபாத் சாலை வழியாக பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஒரகடம் அருகே சென்றபோது, சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் சக்கரம் சிக்கியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஜோசப்ராஜ் உடல் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்து, ஒரகடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: