இறந்த மாட்டீன் மீது மோதாமல் இருக்க மொபட்டில் பிரேக் போட்டதால் சாலையில் விழுந்த மாணவி பலி

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே சாலையில் இறந்து கிடந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க, திடீரென மொபட்டின் பிரேக் பிடித்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவி, தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி 18வது வார்டு, கபாலி நகர் 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகர் (63). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள், விஜயலட்சுமி (18) என்ற மகள் உள்ளனர். விஜயலட்சுமி, கூடுவாஞ்சேரி அருகே கல்வாய் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் விஜயலட்சுமி, தனது மொபட்டில் கல்லூரிக்கு புறப்பட்டார். நெல்லிக்குப்பம் சாலையில் சென்றபோது, பாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே ஒரு மாடு சாலையில் இறந்து கிடந்தது. இதனைக் கண்டதும் அவர், அந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க மொபட்டில் பிரேக் பிடித்தார். அதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நந்தகோபால், எஸ்ஐ சதாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: