5ம் ஆண்டு நினைவு நாள்; ஜெயலலிதா நினைவிடத்தில் 5ம் தேதி அதிமுக மரியாதை

சென்னை: ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் 5ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் கலந்துகொண்டு மரியாதை செய்கின்றனர்.

மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி, வட்ட அளவில், பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிமுகவினர் அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதா படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: