சென்னை: ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் 5ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் கலந்துகொண்டு மரியாதை செய்கின்றனர்.