சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிட்ட நிலையில், மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், கூடுதல் வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர, மாணவ, மாணவியர் மன நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது.