புதுடெல்லி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பேச வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்யும் எங்களை திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். குறிப்பாக நான் தங்கியுள்ளது என் வீடு கிடையாது. அது எங்கள் அறக்கட்டளை அலுவலகம். ஒவ்வொரு மழையின் போதும் அங்கு, மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வரும்.