டெல்லி: உணவு பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றம் அருகே திரண்ட அவர்கள், மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தினர். அப்போது எரிபொருள், காய்கறி என அனைத்தும் விலையேறிவிட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.