சென்னை: மழை பெய்யும் போது எந்த உதவியும் செய்ய தயார் எனக் கூறும் பிரதமர் பாதிப்புக்கு பின் வாய் திறப்பதில்லை என முத்தரசன் கூறியுள்ளார். தமிழ்நாடு கேட்கும் நிவாரணத் தொகையை ஜனநாயக அடிப்படையில் ஒன்றிய அரசு முழுமையாக தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். மாற்றான் தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்படக் கூடாது என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.