அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்டது கத்திரிமலை. 7 கி.மீ. சாலை வசதியின்றி உள்ள இந்த மலை கிராமத்திற்கு நடைபாதை மட்டுமே வழி. இங்கு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் குணசேகரன்.இவர், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர். இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் அங்கேயே தனது மனைவியுடன் தங்கி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.விடுமுறை தினமான நேற்று முன்தினம் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.