பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள தென்னைகளில் அறுவடை செய்யப்படும், செவ்விளநீர் மற்றும் பச்சை ரக இளநீர் உள்ளிட்டவை, வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டில், கடந்த தென்மேற்கு பருவமழையால், வெளியிடங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைந்தது. அதிலும், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அடிக்கடி பெய்த பருவ மழையால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பும் பணி மிகவும் குறைந்தது. தற்போதைய சூழ்நிலையில், இளநீர் உற்பத்தி அதிகரித்தாலும், பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை மற்றும் பனிக்காலம் ஆரம்பத்தால், விற்பனை மந்தமாகியுள்ளது.