வால்பாறை: வால்பாறையில் உள்ள அடர்ந்த வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானைக்கூட்டம் எஸ்டேட்களில் உலா வருகின்றன. நேற்று பகலில் நல்லமுடி, ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் வலம் வந்தன. இந்நிலையில் வால்பாறை வனச்சரகர் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தோட்ட நிர்வாகங்கள் தேயிலை செடிகளுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்களை பாதுகாக்கப்பட்ட இடங்களில் வைக்கவேண்டும்.