இஸ்தான்புல்: துருக்கி இஸ்தான்புல் நகரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக கடல்கா மாவட்டத்தில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில், பிரம்மாண்ட மணிக்கூண்டு ஒன்று இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக மணிக்கூண்டு அருகே யாரும் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. புயலில் வணிக வளாகம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் சுமார் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.