×

தமிழ்நாட்டில் மதுரையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதல் மழை பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மதுரையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதல் மற்றும் மிக கூடுதல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர் உள்பட 29 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் இயல்பான மழை  பதிவாகியுள்ளது.


Tags : Maduro ,Tamil Nadu ,Meteorological Center , Madurai, Extra Rain, Meteorological Center
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...