×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா... 190 பேர் பலி... 10,116 பேர் குணமடைந்தனர்!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.68 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.45 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 6,990 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,87,822 ஆக உயர்ந்தது.

* புதிதாக 190 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,68,980 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,116 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,18,299 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,00,543 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 98.35% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.29% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில்  1,23,25,02,767 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 78,80,545 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India , கொரோனா
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!