திருப்பூர் : மழை காரணமாக தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.