சினிமாவுக்கு சென்ற பெண்ணை கடத்தி பலாத்காரம்: மதுரை போலீஸ் ஏட்டு கைது

மதுரை: மதுரையில் சினிமாவுக்கு சென்ற இளம்பெண்ணை  கடத்திச் சென்று பலாத்காரம் செய்த புகாரில், ஏட்டு கைது செய்யப்பட்டார்.  மதுரை  அவனியாபுரத்தை  சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர்  பிளாஸ்டிக் பைப்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர், கடந்த 27ம் தேதி, தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு இளம்பெண், 2 ஆண் ஊழியர்களுடன், செல்லூர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சென்றார். முதல் காட்சி பார்த்து விட்டு, 4 பேரும் பெரியார் பஸ் நிலையம் வந்தனர். உடன் வந்தவர்களை பஸ்சில் அனுப்பிவிட்டு, மகேஷ்குமார் தனது டூவீலரில் இளம்பெண்ணுடன் அவனியாபுரம் சென்றதாக கூறப்படுகிறது. மதுரை நேதாஜி ரோட்டில் சென்றபோது, இரவு ரோந்து  பணியில் இருந்த ஏட்டு முருகன், மகேஷ்குமாரின் டூவீலரை நிறுத்தி விசாரணை நடத்தினார்.

பின்னர் மகேஷ்குமாரை மிரட்டி, அவரிடமிருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை வாங்கி பணத்தையும் எடுத்துக் கொண்டதாகவும், இளம்பெண்ணை தானே வீட்டில் விடுவதாக கூறி, தனது டூவீலரில் அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது. அந்தப்பெண்ணை மறைவான இடத்தில் வைத்து பலாத்காரம் செய்து, காலையில் அந்தப்பெண்ணை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு மீது இளம்பெண் தரப்பில், மகேஷ்குமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பின், திலகர்திடல் குற்றப்பிரிவில் ஏட்டாக பணியாற்றும் முருகன், கடத்தப்பட்ட இளம்பெண் மற்றும் மகேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நடந்த சம்பவம் உண்மை எனத்தெரிந்தது. இதைத்தொடர்ந்து முருகன்  கைது செய்யப்பட்டார்.

Related Stories: