புதுடெல்லி: கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு தொழில்கள் நலிவடைந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது எப்போது என்று மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி நேற்று கேள்வி எழுப்பினார். மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். ‘கொரோனா பேரிடர் காலத்தில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது எப்போது என கேள்வி எழுப்பினார் இதற்கு, ஒன்றிய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ‘இந்திய அரசு, இந்தியாவின் பொருளாதார நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், அவசியத்துக்கான விரைவான பொருளாதார மீட்சி, பொருளாதார வளர்ச்சிக்கான பரிந்துரைகள் மற்றும் கருத்துகளுக்காக அது சார்ந்த அனைத்து துறையினர்களுடன் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.