சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள துளசிங்கபுரம் பகுதியில் உள்ள நிலத்தை 1987ல் அரசு புறம்போக்கு நிலமாக அறிவித்ததை ரத்து செய்து அப்பகுதியில் சாலை அமைக்கவும் மாநகராட்சி நிலம் என அறிவிக்கவும் உத்தரவிடக் கோரி சிங்காரவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தரவு வருமாறு: குறிப்பிட்ட நிலம், ராணுவ நிலம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலம்தான். ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதி என கூறுவதால் அரசின் திட்டங்களின்படி மாற்று இடங்களை கண்டறிந்து இடம் கொடுக்கலாம். நாட்டை பாதுகாக்க பாடுபடும் ராணுவத்தினருக்கு சொந்தமான நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது.