சென்னை: சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பிரியதர்ஷன் (31) என்பவர், கடந்த அக்டோபர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘நான் சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண செட்டி தெருவில் கிராபிக்ஸ் சென்டர் நடத்தி வருகிறேன். கடந்த 2017ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை பழைய பங்களா தெருவை சேர்ந்த திவ்யா மற்றும் அவரது கணவர் செந்தில் ஆகியோர் பழக்கமாகினர். இவர்கள் மாத ஏல சீட்டு, தீபாவளி பண்டு மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக கூறினர். தங்களிடம் ஏலச்சீட்டு கட்டினால் சீட்டு முடிந்த உடன் பணத்தை ஒரே தவணையில் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறினர். அதை நம்பி 37 லட்சத்து 34 ஆயிரத்து 295 ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர்கள் ஏலச்சீட்டு முடிந்தவுடன் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.