திருவனந்தபுரம்: வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ செய்பவர்களின் பட்டங்களை திரும்ப பெறும் வகையில் அரசு சட்டம் கொண்டு வருவது அவசியமாகும் என்று கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறினார். கேரளாவில் சமீபகாலமாக வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் பலியாவது அதிகரித்து வருகிறது. இதற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியை சேர்ந்த மொபியா என்ற சட்ட கல்லூரி மாணவி வரதட்சணை காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.