சென்னை: நடன இயக்குநர் சிவசங்கரின் மறைவு வேதனை அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தன் நடன இயக்கத்தால் எண்ணற்ற பாடல்களின் வெற்றிக்கு பங்களித்தவர் சிவசங்கர் என கூறினார். கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் வருவார் என நம்பியிருந்த நிலையில் அவரது மறைவு அதிர்ச்சி தருகிறது என தெரிவித்தார்.