சென்னை: சென்னையில் 103 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் கூறியுள்ளது. நீரை அகற்ற 900 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை கூவம் ஆற்றுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.