சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளி வாகனங்களை நிறுத்த ஒரு ஏக்கர் இடம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தக்காளி மொத்த வியாபாரி சங்கம் தொடர்ந்த வழக்கில் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர்ந்துள்ள தக்காளி விலையை கட்டுப்படுத்தவே இடைக்கால உத்தரவு பிறப்பித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.