சென்னை: தாம்பரம் டிடிகே நகர் பகுதியில் மழை பாதிப்புகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். மழை பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார். நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதலில் காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.