டெல்லி : கனடாவில் 2 பேருக்கு உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் கிருமி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் நைஜிரியாவில் இருந்து திரும்பிய பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 பேருக்கு ஓமைக்ரான் கிருமி தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனடா சுகாதாரத்துறை அமைச்சர், பாதிக்கப்பட்ட இருவரும் ஆண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். 2 பேரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருந்து குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களை கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்தி வருவதாக கூறியுள்ளனர்.