அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிகுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Stories: