சென்னை: 200 வருடத்தில் 4வது முறையாக 100 செ.மீ மழை பெய்துள்ளது என பொதுபணித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார். முதலமைச்சர் நேரடியாக சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார் எனவும் கூறினார். தண்ணீர் தேங்குவதற்கான காரணம் என்ன? எங்கு தேங்குகிறது என ஆய்வு செய்து ஓராண்டில் சரிசெய்ய உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.