கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே மழை வெள்ளத்தில் மிதந்தது முதலையா? மரக்கட்டையா? என தெரியாமல் சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பொதுமக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது, கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, மேலும் கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையிலும், இதேபோல், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையிலும் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால், சாலைகள் சில பகுதிகளில் அடித்து செல்லப்பட்டுள்ளன.