ஹரித்வார்: யோகா குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது கிடையாது, அனைவருக்கும் சொந்தமானது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டு இருந்த புதிய கட்டிடத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். மாநில ஆளுனர் குர்மீத் சிங், முதுல்வர் புஷ்கர் சிங் தாமி, உயர்கல்வி துறை அமைச்சர் தான் சிங் ராவத், பதஞ்சலி பல்கலைக்கழக வேந்தர் ராம்தேவ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.