ரிசர்வ் வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை

புழல்: புழல் அருகே புத்தாகரம் வானவன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). கேரள மாநிலம் கொச்சியில் ரிசர்வ் வங்கி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு தனது மகளுடன் கணவரை பார்க்க சென்றார். நேற்று காலை இவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 27 சவரன், ரூ.90 ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: