சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், பொறியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. அதாவது 22 மேற்பார்வை பொறியாளர் பதவிகள், 38 செயற்பொறியாளர் பதவிகள், 100க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர் பதவிகள், கணக்கீட்டாய்வாளர் பதவியில் இருந்து வருவாய் மேற்பார்வை பதவி உயர்வுகள், நிர்வாக மேற்பார்வையாளரில் இருந்து உதவி நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் (கணக்கு) மற்றும் (நிர்வாகம் பதவியில் இருந்து உதவியாளர் பதவிகள், உதவியாளர் கணக்கிலிருந்து கணக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வுகள், தொழில்நுட்ப உதவியாளரில் இருந்து இளமின் பொறியாளர் 2ம் நிலை, பட்டயம் அல்லாத களப்பிரிவு பணியாளர்களில் இருந்து இளமின் பொறியாளர் 2ம் நிலை, உள்முக தேர்வு மூலம் அனைத்து பதவி உயர்வுகள் மற்றும் நிர்வாகப் பிரிவில் பதவி உயர்வுகள் ஆகியவை பல மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பது பணியாளர்கள் மத்தியில் மனச்சுமையை அதிகரித்துள்ளது.