ஊட்டி பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட பின் வனப்பகுதிக்கு சென்று மறைந்த புலியின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி வன கோட்டத்தில் புலி, சிறுத்தை, காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணையானது அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் உள்ள படகு குழாம் உள்ளது. இந்த அணை கரைகளில் அவ்வப்போது மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் அருந்தி செல்வதை காண முடியும்.