புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் இணைந்து கிழக்கு டெல்லி தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக டெல்லி போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.