கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், நேற்று காலை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கும்பகோணம் மாடாகுடியைச் சேர்ந்த முருகேசனுக்கு, இவரது உறவினர் இட்லி பார்சல் வாங்கிச் சென்றார். மருத்துவமனையில், இட்லி பார்சலை முருகேசன் பிரித்து சாப்பிட முயன்றபோது ஒரு இட்லிக்குள் தவளை இறந்து கிடந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக தவளை கிடந்த பார்சலை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்று, உரிமையாளரிடம் புகார் செய்தனர்.