உடுமலை: உடுமலையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மாற்று வழி பாதையான உடுமலை- ஆனைமலை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ் வழித்தடத்தில் உள்ள கரட்டுமடம் பகுதியில் சாலையோர வடிகால் வசதி இல்லாததால் பருவமழை காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நீடித்த கனமழை காரணமாக கரட்டுமடம் சாலை தெப்பம் போல உருமாறியது. சாலையில் தேங்கிய தண்ணீர் அருகில் இருந்த குடிசைகளுக்கு புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.