வேலூர்: வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை ரோட்டை சேர்ந்தவர் இந்திரா(50). பெண் சாமியாரான இவர், அங்காளம்மன் கோயிலில் குறி சொல்லி வருகிறார். இந்நிலையில் இந்திரா நேற்று காலை தனது ஆடுடன் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். அதில், ‘எனது எதிர் வீட்டை சேர்ந்த குணா, அவரது மகள் லட்சுமி ஆகியோர் இரவு நேரங்களில் எனது வீட்டின் மீது கற்களை வீசுகின்றனர்.