வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள்

சென்னை: துபாயிலிருந்து நள்ளிரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தவரிடம் மர்ம நபர்கள் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். மண்ணடியை சேர்ந்த முகமது யூசுப் விமான நிலையத்திலிருந்து பேக், சூட்கேசுடன் டாக்சியில் ஏறியுள்ளார். ஏராளமான பைகளுடன் முகமது யூசுப் காரில் ஏறியதை இன்னோவா காரில் காத்திருந்த கும்பல் நோட்டமிட்டுள்ளது. சைதாப்பேட்டை தேவர் சிலை அருகே யூசுப் காரை மறித்த மர்ம நபர்கள் போலீஸ் என கூறி சோதனை செய்தது. பணம் இருக்கும் என நினைத்து 3 பேக்குகளை எடுத்து கொண்டு தப்பியது மர்ம கும்பல். பேக்குகளை காவல் நிலையத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி விட்டு காரில் தப்பிச் சென்றது மர்ம கும்பல் 

Related Stories: