சென்னை: சென்னை புளியந்தோப்பு அருகே குழந்தையை விற்றதால் கிடைத்த பணத்தை கொள்ளையர் பறித்ததாக தாய் புகார் அளித்துள்ளது. தனது பச்சிளம் குழந்தையை புழல் காவாங்கரையை சேர்ந்த யாஸ்மின் என்பவர் ரூ.2.50 லட்சத்துக்கு விற்றுள்ளார். யாஸ்மின் புகார் தொடர்பாக இடைத்தரகர் ஜெயகீதா மற்றும் சண்முகம் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.