சபரிமலை, கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக்கொண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை  தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக்கொண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி சம்மந்தப்பட்ட ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி-7, 10, 12, 14ம் தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து டிசம்பர்-5, 12, 19, 26, ஜனவரி-2, 9, 11, 13, 16ம் தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தடையும். இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து வரும் டிசம்பர் 23ம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் மற்றொரு ரயில் நாகர்கோயிலுக்கு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும். 24ம் தேதி நாகர்கோயிலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். வரும் 26ம் தேதி நாகர்கோயிலில் இருந்து மாலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இங்கிருந்து 27ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: