சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,01,030 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 740 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,24,731 ஆக உள்ளது. நேற்று கொரோனாவில் இருந்து 765 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,79,895 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரை 36,454 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: