அகர்தலா: திரிபுராவில் மனநிலை பாதித்தவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் மகள்கள், தம்பி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. திரிபுரா மாநிலம், கோவாய் மாவட்டத்தில் உள்ள ஷெவ்ரடாலி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் டெப்ராய். இவர் வீட்டில் இருந்த போது, திடீரென அவரது 2 மகள்கள், தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார். அவரது மனைவியை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று, அவ்வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி அதனை ஓட்டி வந்த ஆட்டோக்காரர், அவரது மகனை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார். இதில், ஆட்டோக்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மகன் படுகாயம் அடைந்துள்ளார்.