70 போலீசாரின் பாதுகாப்புடன் குதிரை மீது ஊர்வலம் சென்ற தலித் மணமகன் மீது தாக்குதல்: சர்சர் என 15 நிமிடத்துக்கு கற்கள் பறந்தன

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே உள்ளது கெரோடி கிராமம். உயர் பிரிவினர் அதிகமாக வசிக்கும் இங்கு, தாழ்த்தப்பட்ட மக்களும் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தின் வரலாற்றில் முதல்முறையாக  தாழ்த்தப்பட்ட வாலிபர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை இரவு குதிரை மீது மாப்பிள்ளை ஊர்வலம் நடத்தினார். இதற்கு, அந்த கிராமத்தை சேர்ந்த உயர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 70க்கும் மேற்பட்ட போலீசார் இந்த மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு பாதுகாப்பாக சென்றனர். இருப்பினும், ஒரு இடத்தில் ஊர்வலம் வரும்போது திடீரென ஒரு கும்பல் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியது. நாலாபக்கத்திலும் இருந்து 15 நிமிடங்களுக்கு இடைவிடாமல் கற்கள் பறந்து வந்து தாக்கியதில் போலீசாரும் காயமடைந்தனர். இது தொடர்பாக, 10 பேரை போலீசார் இதுவரையில் கைது செய்துள்ளனர்.

Related Stories: