திருமலை: தங்கள் இயக்கத்தை் சேர்ந்த 27 பேரை பாதுகாப்பு படைகள் சுட்டு கொன்றதால் ஆத்திரமடைந்த நக்சல்கள், தண்டவாளத்தை சேதப்படுத்தி சரக்கு ரயிலை கவிழ்த்தனர். மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கடந்த 13ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். இதனை எதிர்பாராத நக்சல்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர். இதில் 27 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.