குட்கா கடத்திய வாலிபர் கைது

பொன்னேரி: மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆந்திராவில் இருந்து குட்கா போதைப்பொருட்களை வாகனங்களில் தொடர்ந்து கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், பொன்னேரி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் நேற்று மீஞ்சூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், எஸ்ஐ வேலுமணி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணலியில் இருந்து வந்த ஒரு காரை மடக்கினர். சோதனையில் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைபொருட்கள் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழுதிகைமேடு பகுதியைச் சேர்ந்த தயாநிதி(35) என்பவரை கைது செய்து கார், குட்காவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: