உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: எம்எல்ஏ, மாவட்ட குழு பெருந்தலைவர் வழங்கினர்

மதுராந்தகம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, இளைஞர்கள் எழுச்சி நாளாக காஞ்சி  தெற்கு மாவட்டம் முழுவதும் கட்சி கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகள், நிவாரண உதவிகள், தங்க மோதிரம் அணிவித்தல், மரக்கன்றுகள் நடுதல் உப்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று மிக விமர்சையாக நடந்தது. இதையொட்டி, மதுராந்தகம் ஒன்றிய இளைஞரணி சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மாவட்ட குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ் ஆகியோர், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, அவர்களுக்கான ஆடைகள் உள்பட பொருட்கள் வழங்கினர்.

இதில், மதுராந்தகம் நகர செயலாளர் குமார், மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் சத்யசாய், ஒன்றிய பொறுப்பாளர் பொன்.சிவகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், மதுராந்தகம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் ஆண்டோ சீரில் ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிகாமணி, தேவாதூர் குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் கர்ணன், நிர்வாகிகள் வெங்கடேசன், ஜெய்சங்கர், பாக்கம் சக்திவேல், சக்கரபாணி, சீனிவாசன் நரேந்தர், செல்வம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: