சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 இலட்சத்திலிருந்து ரூ.8.00 இலட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1200-லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகையினை ரூ.50,000-லிருந்து ரூ.1.00 இலட்சமாக உயர்த்தியும் அரசாணை (நிலை) எண்.96, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-3)துறை, நாள் 25.11.2021-இல் ஆணை வெளியிடப்பட்டது.