சென்னை: சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பட்டாளம் பகுதியில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். நேற்று சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், 2 நாட்களாக விட்டுவிட்டு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.