புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: பிரதமருக்கு டெல்லி முதல்வர் வலியுறுத்தல்

டெல்லி: புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். மிகவும் சிரமப்பட்டு, கொரோனாவில் இருந்து நம் நாடு மீண்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு வைரஸ் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம் என டெல்லி முதல்வர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் (B.1.1.529) தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய வைரஸ்களைவிட அபாயகரமானவை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.

இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது. புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களை, இந்த நாடுகளின் வழியாக வருகிறவர்களை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. ஒமிக்ரான்  என்ற புதிய வகை கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதலைமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: