×

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 8,318 பேர் பாதிப்பு, 10,967 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ், 465 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.67 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.45 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக  8,318 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,63,749  ஆக உயர்ந்தது.

* புதிதாக 465 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,67,933 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,967 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,88,797 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,07,019 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 98.34% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.31% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,21,06,58,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 73,58,017 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India , india, corona, death, recovery
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...