சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டுள்ளது. கனமழையாகவும், மிக கனமழையாகவும் அவ்வப்போது பெய்து வருகிறது. வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ-யை தாண்டி மழை பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீட்டரை தாண்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 செ.மீ மழையும், சோழவரத்தில் 15 செ.மீ, திருவள்ளூரில் 13 செ.மீ, பொன்னேரியில் 12 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ, காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் 12 செ.மீ, ஸ்ரீபெரும்புதூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.