புதுடெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், காஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. இந்த விலைவாசி உயர்வை கண்டித்தும், பணவீக்கத்தை எதிர்த்தும் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் வரும் டிசம்பர் 12ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர்.